இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறையை கண்டிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தழுவிய பூரண கர்தாலை முன்னிட்டு கிளிநொச்சியும் முற்றாக முடங்கியுள்ளது.
கிளிநொச்சியில் பூரண கர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நகர வர்த்தக நிலையங்கள், சேவை சந்தைகள் பூட்டப்பட்டது. ஆயினும் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாற்று இடங்களில் விற்பனை இடம்பெற்று வருகின்றது.
தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன் அரச திணைக்களங்கள் வழமைபோல் திறந்துள்ள போதிலும் அதன் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை.
பாடசாலைகளிற்கு மாணவர்கள் வருகை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை. மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளமையால் வழமையான செயற்பாடுகள் இடம்பெறாது கிளிநொச்சி நகரும் பரந்தன் பகுதியும் சோபையிழந்து காணப்படுகிறது.
10 தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், கிளிநொச்சி